Meena Shocked after asking About Dining Table Cost : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா வைத்திருந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக் கொண்டு செந்தில் அதில் வீட்டிற்கு தேவையான ஃபர்னிச்சர் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வாங்கியுள்ளார்.
2 Min read
Published : Oct 14 2025, 06:20 PM IST
16
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில் சரக்கு அடிச்சிட்டு வந்த செந்திலிடம் மீனா கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. தனக்கு தூக்கும் வருகிறது, நீ கேட்ட எல்லா கேள்விகளுக்கும் காலையில் பதிலளிப்பதாக கூறிவிட்டு செந்தில் தூங்கிவிட்டார். இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 611ஆவது எபிசோடில் செந்தில் மற்றும் மீனா இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
26
செந்தில் மற்றும் மீனா
காலையில் தூங்கி எழுந்ததும் காபி, கேட்ட செந்திலுக்கு மீனா தரமான பதிலடி கொடுத்தார். அதாவது, பால் இல்ல. அடுப்பு, பாத்திரம் என்று எதுவும் இல்லை என்றார். இதுவே என்னுடைய வீடாக இருந்தால் என்னுடைய அம்மா தூங்கி எழுந்ததும் காபி போட்டு என்னுடைய கையில் கொடுத்துவிடுவார்கள் என்றார். அப்போ எதற்கு அடம்பிடித்து தனியாக வந்தீர்கள். சொகுசாக வளர்ந்த நீங்கள் அங்கேயே இருக்க வேண்டியதுதானே என்றார் மீனா.
36
டைனிங் டேபிள்
இப்படி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே ஏற்கனவே புக் செய்து வைத்திருந்த டைனிங் டேபிள் வந்தது. இப்போதைக்கு டைனிங் டேபிள் மட்டும் தான். இனி போக போக ஒவ்வொன்றாக வந்துவிடும் என்றார். சரி, டைனிங் டேபிள் எவ்வளவு? உங்களுக்கு காசு ஏது என்று மீனா கேட்க, கோபமடைந்த செந்தில் சும்மா சும்மா காசு காசுன்னு எப்போ பார்த்தாலாயும் அதிலேயே குறியா இருக்க. நான் யாரு, எவ்வளவு பெரிய ஆளு என்றார்.
ஜாய் கிரிசில்டா கொடுத்த புகார் எதிரொலி... மாதம்பட்டி ரங்கராஜுக்கு மகளிர் ஆணையம் வைத்த செக்
46
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு
அப்போது தான் இந்த டைனிங் டேபிளின் விலை ரூ.42000 என்றார். அதற்கு ரூ.42 ஆயிரத்திற்கு டைனிங் டேபிள் தேவையா என்று மீனா கேட்க, ரொம்பவே கூலாக ஆமாம் வேண்டும் என்றார். சமைக்க பாத்திரம் இல்ல, காய்கறிகள் இல்ல, பால் போட்டு குடிக்க கூட பால் இல்ல என்று மீனா ஒவ்வொன்றாக அடுக்க, டைனிங் டேபிள் மட்டும் வாங்கியாச்சு. இப்போது இதை வாங்கியிருக்கிறீர்கள். இதில் உட்கார்ந்து என்னத்த சாப்பிடுவீர்கள் என்று மீனா கேட்டார்.
56
Image Credit :
Jio HotStar
திரும்ப வந்த மீனா
பணத்துக்கு என்ன பண்ணுனீங்க? இதையும் கடனுக்கு தான் வாங்குனீர்களா? என்று கேட்ட மீனாவிற்கு நான் ஏன் கடனுக்கு வாங்க வேண்டும். எல்லாவற்றையும் ரொக்கமாகத்தான் வாங்குனேன். இதை அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த மீனாவிற்கு மற்றொரு ஷாக் கொடுத்தார் செந்தில். அதாவது, மிஸ்டர் பாண்டியன் ரூ.10 லடச்ம் கொடுத்தார் அல்லவா, அந்த பணம் தான். அதிலிருந்து தான் எடுத்து செலவு செய்தேன். ஏன் எடுத்தேன் எந்த நம்பிக்கையில் எடுத்தேன் எல்லாவற்றிற்கும் நான் விளக்கம் கொடுத்துவிடுகிறேன்.
66
Image Credit :
JioHotstar
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
பணம் விஷயத்தை பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம். இப்போதைக்கு பால், காய்கறி, சமைக்க தேவையான பாத்திரம் என்று எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார். அவர் புறப்பட்டதும், வீட்டை பூட்டி சாவியை கால் மிதிக்கு அடியில் வைத்துவிட்டு மீனா தனது மாமனார், மாமியார் வீட்டிற்கு சென்றார்.